உடுமலை அருகே அரசு துவக்கபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தலின் படி உடுமலை ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் மகிழ்ச்சியுடன் ஈடுபட பள்ளி கட்டமைப்பு வசதி முக்கியம் என மேலாண்மை குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. அதன் படி உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். உடுமலை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அக்டோபர் மாத கருப்பொருள்கள் பற்றி கலந்து உரையாடினார்.

குறிப்பாக உப குழுக்கள் அமைப்பது, பள்ளி மாணவர்களை விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பது பற்றியும், பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல் பற்றியும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களிடம் எடுத்துரைத்தார்.

மேலும் பள்ளிக்கு இந்த வருடம் வழங்கப்பட்டுள்ள மானியம் மற்றும் பராமரிப்பு மானியத்தில் இருந்து செலவிடப்பட்ட விவரங்கள் பற்றியும், வண்ணமயமான நாற்காலிகளும் மேசைகளும் ஒன்று முதல் 3-ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாங்கப்பட்டு உள்ளதையும் மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் மகிழ்ச்சியுடன் ஈடுபட பள்ளி கட்டமைப்பு வசதியும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிறைவாக பள்ளி உதவி ஆசிரியர் கண்ணபிரான் நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...