உடுமலை அருகே அரசு துவக்கபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தலின் படி உடுமலை ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் மகிழ்ச்சியுடன் ஈடுபட பள்ளி கட்டமைப்பு வசதி முக்கியம் என மேலாண்மை குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. அதன் படி உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை தாங்கினார். உடுமலை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அக்டோபர் மாத கருப்பொருள்கள் பற்றி கலந்து உரையாடினார்.

குறிப்பாக உப குழுக்கள் அமைப்பது, பள்ளி மாணவர்களை விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பது பற்றியும், பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல் பற்றியும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களிடம் எடுத்துரைத்தார்.

மேலும் பள்ளிக்கு இந்த வருடம் வழங்கப்பட்டுள்ள மானியம் மற்றும் பராமரிப்பு மானியத்தில் இருந்து செலவிடப்பட்ட விவரங்கள் பற்றியும், வண்ணமயமான நாற்காலிகளும் மேசைகளும் ஒன்று முதல் 3-ம்வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாங்கப்பட்டு உள்ளதையும் மாணவர்கள் கற்றல் கற்பித்தலில் மகிழ்ச்சியுடன் ஈடுபட பள்ளி கட்டமைப்பு வசதியும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நிறைவாக பள்ளி உதவி ஆசிரியர் கண்ணபிரான் நன்றி கூறினார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...