உலக பார்வை தினம் - கோவையில் ஆப்டோமெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கம் சார்பில் வாக்கத்தான் நடைபயணம்

உலக பார்வை தினத்தை முன்னிட்டு ஆப்டோமெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கம் சார்பில் கோவையில் பணிபுரியும் போதும் உங்கள் கண்களை நேசியுங்கள் என்ற தலைப்பில் வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது.


கோவை: உலக பார்வை தினத்தைமுன்னிட்டு நடைபெற்ற வாக்கத்தான் நடைபயணத்தில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உலக பார்வை தினம் (WSD) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக "பணிபுரியும் போதும் உங்கள் கண்களை நேசியுங்கள்" என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, "ஆப்டோமெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கம்" சார்பில் கோவையில் "பணிபுரியும் போதும் உங்கள் கண்களை நேசியுங்கள்" என்ற தலைப்பில் வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வை கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மற்றும் லோட்டஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மதுசுதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ரேஸ்கோர்ஸ் பகுதியில் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது.



பணியிடத்தில் பார்வையைப் பாதுகாப்பது, ஆரோக்கியமான கண்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த வாக்கத்தான் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் ஆப்டோமெட்ரிக் அமைப்பின் நிர்வாகிகள், குமரன், ப்ரீதா ராம்பிரசாத், சாமுவேல் விஜய், அருள் மற்றும் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...