வால்பாறை வழியாக கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

மழை காரணமாக அம்பலப்பாறை என்ற இடத்தில் சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை உடைந்து சேதம் அடைந்துள்ளதால், அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.


கோவை: சாலையை சரி செய்யும் வரை வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் செல்ல வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி உள்ளது. இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும், மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதில் வால்பாறையில் இருந்து 80 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகள் பார்க்க செல்லுகின்றனர்.



இந்நிலையில் நேற்று அதிரப்பள்ளி வன பகுதியில் பெய்த கனமழையால் அம்பலப்பாறை என்ற இடத்தில் சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை உடைந்து சேதம் அடைந்தது.

இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை சரி செய்யும் வரை வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று திருச்சூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...