வால்பாறையில் கலைஞர் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் -200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர்.


கோவை: கலைஞர் வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இஜிசி மற்றும் பொது மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞர் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர். வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. இப்பணியில் 10 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றினார்.

வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் ராஜாராம், வால்பாறை மருத்துவர் சாமிநாதன், முடிஸ் நகர் மருத்துவர் உதயா, சோலையார் நகர் மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் பணியாற்றினார்.



இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இஜிசி, பொது மருத்துவ ஆலோசனை போன்றவைகள் மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.



இதில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் துணைத் தலைவர் தாமா செந்தில்குமார் மற்றும் திமுக நகரச் செயலாளர் சுதாகர் ஆகியோர் இப்பணியை துவங்கி வைத்தனர். காலை 10 மணியிலிருந்து முகாம் நடைபெற்றது.



இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...