தாராபுரம் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஆய்வு கூட்டம் - ஊராட்சிகளின் வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசனை

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கான ஆய்வு கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள், குடிநீர் பிரச்சினை, தார் சாலை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


திருப்பூர்: கிராம ஊராட்சி பகுதியில் மிகவும் பழுது அடைந்த சாலைகளை புதுப்பிப்பது, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கான ஆய்வு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் த.பானுப்பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) என். சிவகுருநாதன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் இ.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள், குடிநீர் பிரச்சினை, தார் சாலை அமைப்பது குறித்தும் மற்றும் 16 கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.



அப்போது ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில் குமார் கூறும்போது, இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை கை கொடுக்கவில்லை. இதனால் கிராமப்புற பகுதியில் பல இடங்களில் குடிநீர் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோன்று கிராம ஊராட்சி பகுதியில் மிகவும் பழுது அடைந்த சாலைகளை புதுப்பிப்பது, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தெய்வசிகாமணி, பழனிசாமி, கீதாலட்சுமி, கலைச்செல்வி, சுப்பிரியா உள்ளிட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...