வால்பாறையில் கனமழை - சோலையார் நீர்மட்டம் ஓரே நாளில் 3 அடி உயர்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்த கனமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில், 3 அடி உயர்ந்துள்ளது.


கோவை: வால்பாறை பகுதிகளில் கடந்த தினங்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

வால்பாறையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்மழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் 98.28 அடியாக உயர்ந்தது. ஓரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு, 1,269 கனஅடி நீர்வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 410 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

மழை நிலவரம்: அளவு(மி.மீ.,)சோலையாறு - 31, பரம்பிக்குளம் - 20, ஆழியாறு - 49, வால்பாறை - 78, மேல்நீராறு - 106, கீழ்நீராறு - 88, காடம்பாறை - 37, மேல்ஆழியாறு - 22, சர்க்கார்பதி - 21. வேட்டைக்காரன்புதுார் - 27, மணக்கடவு - 7, துாணக்கடவு - 16, பெருவாரிப்பள்ளம் - 18, நவமலை - 23, பொள்ளாச்சி - 58 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...