வால்பாறையில் கனமழை - சோலையார் நீர்மட்டம் ஓரே நாளில் 3 அடி உயர்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்த கனமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில், 3 அடி உயர்ந்துள்ளது.


கோவை: வால்பாறை பகுதிகளில் கடந்த தினங்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

வால்பாறையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்மழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் 98.28 அடியாக உயர்ந்தது. ஓரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு, 1,269 கனஅடி நீர்வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 410 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

மழை நிலவரம்: அளவு(மி.மீ.,)சோலையாறு - 31, பரம்பிக்குளம் - 20, ஆழியாறு - 49, வால்பாறை - 78, மேல்நீராறு - 106, கீழ்நீராறு - 88, காடம்பாறை - 37, மேல்ஆழியாறு - 22, சர்க்கார்பதி - 21. வேட்டைக்காரன்புதுார் - 27, மணக்கடவு - 7, துாணக்கடவு - 16, பெருவாரிப்பள்ளம் - 18, நவமலை - 23, பொள்ளாச்சி - 58 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...