கோவையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை வஉசி மைதானத்தில் இதழாளர்-கலைஞர் குழுவின் சார்பில் தமிழ் வெல்லும் இதழாளர்-கலைஞர் சிறப்பு புகைப்படக்கண்காட்சி வருகின்ற 18 ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கோவையில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியை கண்டு களிக்குமாறு மாணவர் மாணவியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை வஉசி மைதானத்தில் இதழாளர்-கலைஞர் குழுவின் சார்பில் தமிழ் வெல்லும் இதழாளர்-கலைஞர் சிறப்பு புகைப்படக்கண்காட்சி வருகின்ற 18 ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இதழாளர் கலைஞர் குழுவின் சார்பில் தமிழ் வெல்லும் இதழாளர் கலைஞர் சிறப்பு புகைப்படக்கண்காட்சி வருகின்ற 18.10.2023 புதன்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இப்புகைப்படக்கண்காட்சி 18.10.2023 அன்று முதல் ஒருமாதம் வரை நடைபெறவுள்ளது. இப்புகைப்படக் கண்காட்சியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவன தலைவத் கிருஷ்ணராஜ் வாணவராயர் திறந்து வைக்கவுள்ளார்.

மேலும், இதழாளர் கலைஞர் குழுவின் உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், இப்புகைப்படக் கண்காட்சியில் கலைபண்பாட்டுத் துறை சார்பில் மாலை 4.30 மணிக்கு கிராமிய நையாண்டி மேளம், ஸ்ரீசக்ரா ஜிக்காட்ட கலைக்குழு, ஸ்ரீ கலாலயா அகாடமி - பரதநாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும், இந்துஸ்தான் கல்லூரி மாணவ மாணவியர்களின் சிலம்பாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

இப்புகைப்படக் கண்காட்சியினை பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பார்வையிட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...