லாட்டரி மார்டின் மீது குறி வைத்து வருமானவரித் துறை ரெய்டு ஏன்? - மார்ட்டினின் மனைவி விளக்கம்

தொழிலதிபர் மார்டின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என அவரது மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் கோவையில் பேசியுள்ளார்.


கோவை: லாட்டரி மார்டின் மீதுகுறி வைத்து வருமானவரித் துறை ரெய்டு ஏன்? என அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவையில் ஆயிரம் கிலோ கேக் எடை தயாராகி வருகிறது.

கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பிளம் கேக் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனி ஹாஸ் 6ஹோட்டலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக "1000" கிலோ கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.



இதில் கேக் தயாரிக்க தேவையான முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள் மற்றும் ஒயின் உள்ளிட்ட பழ ரசங்களை ஊற்றி கலந்து 1000 கிலோ தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சமூக ஆர்வலர் லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் பெண்கள், ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊழியர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

பின்னர் இது குறித்து பேசிய லீமா மார்டின்,



ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை குடும்ப விழாவாக கொண்டாடுவதாகவும் இந்த ஆண்டு1000"கிலோ கேக் தயாரிப்பதற்கான உலர் பழங்கள் கலவை பணிகளை அனைவரும் இணைந்து செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தெரிவித்தனர்.

மேலும் தொழிலதிபர் மார்ட்டின் அலுவலகத்தில் நடைபெற்ற வருமானத்துறை சோதனை குறித்து பேசிய அவரது மனைவி லீமா ரோஸ் மார்டின், வருமான வரித்துறை அதிகாரிகள் கல்கத்தா பகுதியில் இருந்து திடீர் என வந்தார்கள் எனவும்

இன்று காலை சோதனை முடிவடைந்தது என்றார்.

மேலும் தேர்தல் வருகின்றது என்பதால் தவறான செய்தி அவர்களுக்கு சென்றுள்ளது எனவும் அதனால் வந்து உள்ளார்கள் எனவும் டாக்குமெண்ட்ஸ் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்றார். மேலும் கோவை நகரப் பகுதிகளில் கேமரா பொருத்துவதற்காக 7 கோடியே 7 லட்சத்தி 82 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நகரத்தைச் சுற்றி 240 கிலோ மீட்டர் சுற்றளவில் கேமராக்கள் பொறிப்பதற்கு கோவை மாநகராட்சிக்கு ரோட்டரி கிளப் சார்பாக நிதி வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...