கோவையில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி

கோவை எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ் கனவு நிகழ்ச்சியில் "ஈதல் இசைபட வாழ்தல்” என்னும் பொருண்மையில் எழுத்தாளர் நந்தலாலா, சொற்பொழிவாளர், கருத்துகளை எடுத்துரைக்க உள்ளார்.

கோவை எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் வரும் 19 ஆம் தேதி மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நான்காவது நிகழ்வாக வரும் 19.10.2023 அன்று காலை 09.00 மணிக்கு எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப (Dr. SNS College of Technology) கல்லூரியில் நடைபெறும் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ஈதல் இசைபட வாழ்தல் என்னும் பொருண்மையில் எழுத்தாளர். திருமிகு நந்தலாலா, சொற்பொழிவாளர், அவர்கள் கருத்துகளை எடுத்துரைக்க வருகைதரவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ்ப் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படவுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகக்காட்சி, 'நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம். தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...