மூலனூர் பகுதிகளில் எண்ணெய் வித்து பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியம்

திருப்பூர் மாவட்டம் மூலனூர் சுற்று ட்டார பகுதியில் உள்ள எண்ணை வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: விவசாயிகள் தரிசு நிலங்களில் எண்ணெய் வித்து பயிர்களான வேம்பு, புங்கன் மற்றும் இலுப்பை நடவு செய்ய மானிய உதவி வழங்கப்படுகிறது.

மூலனூர் சுற்று–வட்டார பகுதியில் உள்ள எண்ணை வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என மூலனூர் வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வேளாண்மைதுறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய எண்ணை வித்து பயிர்கள் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்களில் மரக்கன்று நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட உள்ளது.

விவசாயிகள் தரிசு நிலங்களில் எண்ணெய் வித்து பயிர்களான வேம்பு, புங்கன் மற்றும் இலுப்பை நடவு செய்ய மானிய உதவி வழங்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வேம்பு பயிர்களுக்கு எக்டருக்கு ரூ.17 ஆயிரம் மற்றும் புங்கன் பயிருக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம், இலுப்பை பயிருக்கு எக்டேருக்கு ரூ.15 ஆயிரம் என மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் நடவு செய்தது முதல் மூன்று ஆண்டுகளுக்கு பயிர்கள் மற்றும் பராமரிப்பு மானியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மூலனூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...