பெரியநாயக்கன்பாளையத்தில் திருடு போன 105 பவுன் மீட்பு - நகைகளை திருடிய தந்தையும், மகனும் கைது

கோவை பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப் பகுதியில் திருட்டு போன 105 பவுன் தங்க நகைகளை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு தந்தை, மகன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: போட்டோகிராபி தொழில் செய்வதற்காக நகைகளை திருடிய தந்தையையும், மகனையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப் பகுதியில் திருட்டு போன 105 பவுன் தங்க நகைகளை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு தந்தை, மகன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு வீடுகளில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூரில் உள்ள மின்வாரிய பொறியாளர் சுரேந்திரன் வீட்டில் 72 பவுன் நகைகள் திருடுபோயின. இது குறித்து வழக்கு பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பெரியநாயக்கன்பாளையம் சரக டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையில் ஆய்வாளர் தாமோதரன் உள்ளிட்ட தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நகை திருட்டு சம்பவங்கள் ஈடுபட்டவர்கள் மறைந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து சந்தேகத்திற்கு இடமான இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சாமி செட்டிபாளையம், பகவான் கார்டன், இடிகரை, பூச்சியூர் உள்ளிட்ட பகுதிகளில் நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.



இருவரையும் பிடித்து விசாரித்த போலீசார் அவர்களிடமிருந்து 105 பவுன் நகைகளை மீட்டனர். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை இளமனுரை சேர்ந்த லாரி டிரைவர் பழனிச்சாமி மற்றும் இவரது மகன் சின்ன கருப்புசாமி என்று அழைக்கப்படுகின்ற அர்ஜுனன் என்பது தெரியவந்தது. அர்ஜுனன் போட்டோகிராபி தொழில் ஈடுபடுவதற்காக நகைகளை திருடி, மதுரைக்கு கொண்டு செல்வது வழக்கமாக வைத்திருந்து உள்ளார். திருடப்பட்ட நகைகளை பழனிச்சாமி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.



அர்ஜுனனிடமிருந்து ரூ.3.30 லட்சம் மதிப்புள்ள கேமராவும் கைப்பற்றப்பட்டது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...