தாராபுரத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் விளக்கக் கூட்டம்

நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமையில் தாராபுரம் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான விளக்கக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது.


திருப்பூர்: தூய்மை பணியாளர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் சென்றடையவும், அவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்படவும் உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட உள்ளதாக நகர மன்றத் தலைவர் பாபு கண்ணன் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கான விளக்கக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி ஜவகர் நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பாரி ஜான் முன்னிலை வைத்தார்.



தலைவர் பாபு கண்ணன் பேசியதாவது, முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள தனியார் உணவகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தனி நபர்களின் இல்லங்கள், ஒலித்தவைகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவான அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் உரிய நேரத்தில் சென்றடையவும் அவர்களின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்படவும் உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி ஐயப்பன் ஷாலினி நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...