பொள்ளாச்சி-போத்தனூர் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க இன்று சோதனை

பொள்ளாச்சி - போத்தனூர் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, சோதனை ஓட்டம் இன்று (19ம் தேதி) நடப்பதால், பொதுமக்கள் தண்டவாளத்தின் அருகே செல்ல வேண்டாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


கோவை: இன்று,காலை, 7:30 மணிக்கு துவங்கி, 10:50 மணி வரை இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ரயிலானது, 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க உள்ளது.

ரயில்வே தண்டவாளம் உறுதித்தன்மையை அறியவும், ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும், இன்று திண்டுக்கல்-ஈரோடு ரயில், பொள்ளாச்சி - போத்தனுார் வழியாக சோதனை ஓட்டம் செல்கிறது.

இன்று, காலை, 7:30 மணிக்கு துவங்கி, 10:50 மணி வரை இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ரயிலானது, 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க உள்ளது.

அதனால், ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தண்டவாளத்தின் அருகே செல்ல வேண்டாம். மேலும், தண்டவாளத்தின் அருகே கால்நடைகள் மேய்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதிவேகத்தில் ரயில் இயக்கி சோதனை நடத்திய பின், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தென்னக ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், பொள்ளாச்சி - கோவை ரயிலின் வேகம் விரைவில் அதிகரிக்கப்படும்.

அதேபோன்று, பொள்ளாச்சியில் இருந்து, கோவை, திருப்பூர், சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கவும் வாய்ப்புள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...