கோழிப்பண்ணையில் பணியாற்றிய ஆறு சிறுவர்கள் அதிரடியாக மீட்பு

தாராபுரம் அருகே கோழிப்பண்ணையில் சிறார்கள் பணியாற்றுவதுவதாக புகார் வந்ததை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வு மேற்கொண்டதில் 6-சிறார்களை மீட்கப்பட்டனர்.


திருப்பூர்: குழந்தை தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்த்த அதிகாரிகள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே பெல்லம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 6-குடும்பத்தினர் தங்கி பணியாற்றி வந்தனர். இவர்களின் குழந்தைகள் அதேபண்ணையில் பணியாற்றுவதாக 1098-எண்ணுக்கு புகார் வந்தது இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் உதவி மையம் அலுவலர்கள் மற்றும் குண்டடம் போலீசார் அங்கு கள ஆய்வு செய்தனர் அதில் 13-வயது முதல் 17-வயது வரை உள்ள 6-சிறார்கள் கடந்த 2 -மாத காலமாக பணியாற்றிவந்தது தெரியவந்ததை உறுதி செய்தனர்.

இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.280 சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சிறார்களை மீட்ட காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இவர்களது பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தாய்மொழி பள்ளிகள் இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்பியதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சொந்த ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர் இதையடுத்து குடும்பத்தினர் குழந்தைகளை அழைத்து சென்றனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...