நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் - திருப்பூரில் தொடக்கம்

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து இயக்கத்தை திருப்பூரில் அயலக அணி செயலாளரும் , மாநிலங்களவை உறுப்பினருமான அப்துல்லா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.


திருப்பூர்: திமுக தொடங்கிய கையெழுத்து இயக்கத்தில் திருப்பூரில் மட்டும் ரெண்டு லட்சம் இலக்கு நிர்ணயம்.

நீட் தேர்வு விலக்கு எங்கள் இலக்கு என்ற தலைப்பில் மாநிலம் தழுவிய அளவில் திமுக சார்பில் திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பாக கையெழுத்து இயக்கம்தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் துவங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தினை மாநிலங்களவை உறுப்பினரும் திமுகவின் அயலக அணி செயலாளருமான எம் எம் அப்துல்லா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர். இந்நிகழ்வை மக்கள் இயக்கமாகக் கொண்டு சேர்த்து 50 நாட்களில் திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 2 லட்சத்திற்கும் மேலான கையெழுத்துக்களை பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...