நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் - திருப்பூரில் தொடக்கம்

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் கையெழுத்து இயக்கத்தை திருப்பூரில் அயலக அணி செயலாளரும் , மாநிலங்களவை உறுப்பினருமான அப்துல்லா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.


திருப்பூர்: திமுக தொடங்கிய கையெழுத்து இயக்கத்தில் திருப்பூரில் மட்டும் ரெண்டு லட்சம் இலக்கு நிர்ணயம்.

நீட் தேர்வு விலக்கு எங்கள் இலக்கு என்ற தலைப்பில் மாநிலம் தழுவிய அளவில் திமுக சார்பில் திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பாக கையெழுத்து இயக்கம்தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் துவங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தினை மாநிலங்களவை உறுப்பினரும் திமுகவின் அயலக அணி செயலாளருமான எம் எம் அப்துல்லா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர். இந்நிகழ்வை மக்கள் இயக்கமாகக் கொண்டு சேர்த்து 50 நாட்களில் திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 2 லட்சத்திற்கும் மேலான கையெழுத்துக்களை பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...