கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்காக மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடைபெற்று வருகிறது.


கோவை: கவின்கலை, நுண்கலை, இசை வாய்ப்பாடு, தோல்கருவிகள், மொழிதிறன், நாடகம், நடனம் உள்ளிட்ட ஒன்பது வகைகளில் 190 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 7470 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.



கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில், அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்காக மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடைபெற்று வருகிறது.



இந்த போட்டியில் கவின்கலை, நுண்கலை, இசை வாய்ப்பாடு, தோல்கருவிகள், மொழிதிறன், நாடகம், நடனம் உள்ளிட்ட ஒன்பது வகைகளில் 190 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 7470 மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.



இந்நிலையில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் இந்த கலைத் திருவிழாவை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார், நேரில் பார்வையிட்டு இதில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு கலை நிகழ்ச்சி போட்டிகளை கண்டுகளித்தார். இதில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டியில் கலந்து கொள்வார்கள்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் செயலாளர் சரஸ்வதி கண்ணையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...