சந்தேகத்திற்குரிய நபர்களை பார்த்தால் தகவல் கொடுக்கவும் - கோவை மாவட்ட காவல்துறை வேண்டுகோள்

கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான விஷயங்களை பார்த்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கும்படி பொதுமக்களிடம் கோவை எஸ்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: கொச்சின் குண்டு வெடிப்பு தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.



கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பத்தின் எதிரொலியாக தமிழக - கேரளா எல்லையான கோவையில் உள்ள 13 சோதனை சாவடிகளில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாரயணன் மேற்பார்வையில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, தமிழக டிஜிபி உத்தரவின் பேரில் தமிழக - கேரள எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.



குறிப்பாக கோவை மாவட்டம் கேரள எல்லைகளில் உள்ள 13 சோதனை சாவடிகளில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாரயணன் மேற்பார்வையில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



அதேபோல் கோவையில் உள்ள முக்கிய தேவலாயங்கள், கோவில்கள், மசூதிகள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 100 க்கு மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதன் தொடர்ச்சியாக தமிழக - கேரளா எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் மோப்ப நாய் உதவியுடன் வாகன தணிக்கை நடைபெறுவதை எஸ்.பி பத்ரிநாரயணன் நேரில் பார்வையிட்டார்.



பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன தணிக்கை நடைபெறுவதாகவும் ஒவ்வொரு சோதனை சாவடியிலும் உதவி ஆய்வாளர் தலைமையில் நான்கு local காவலர்கள், நான்கு AR போலீஸ் போடப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். கோவையில் உள்ள சோதனை சாவடியில் வாளையார் சோதனை சாவடி மிகவும் முக்கியமானது என்பதால் இந்த சோதனை சாவடியில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 40 பீட் களுக்கு காவலர்கள் செல்லும் நிலையில் தற்பொழுது 65 பீட் செல்லக் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கூட்டம் அதிகமாக உள்ள முக்கிய வழிபாட்டுத் தளங்களிலும் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒரு ஏடிஎஸ்பி ஐந்து டிஎஸ்பி 20 காவல் ஆய்வாளர்கள் அனைவரும் மதியத்தில் இருந்து மாவட்டம் முழுவதும் தொடர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இது மேலும் தொடரும் எனவும் தெரிவித்தார். மக்கள் அனைவரும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார்.

காவல்துறை அனைத்தையும் எதிர்கொள்வதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான ஏதேனும் விஷயங்களை பார்த்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கும் படியும் சோதனை சாவடிகளில் காவல்துறையினர் சோதனைக்கு ஒத்துழைப்பு நாளும் மாறும் கேட்டுக்கொண்டார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...