உடுமலை அருகே நடைபெற்ற பொன்னர் சங்கர் திருக்கல்யாணம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மெட்ராத்தியில் அருள்மிகு பொன்னர் சங்கர் திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் நடந்த பொன்னர் சங்கர் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

உடுமலை அருகே மெட்ராத்தி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் பொன்னர் சங்கர் கதைப்பாடல் தொடர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பெரியகாண்டி அம்மன் தவசு, செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம், தாமரை அரியநாச்சியின் பூப்பு நன்னீராட்டு விழா, குன்னுடையாசாமி தாமரை அரியநாச்சி கல்யாணம், செல்லாண்டி அம்மன் தேரோட்டம், தாமரை தவசு, பொன்னர் சங்கர் அருக்காணி தங்கம் பிறப்பு ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வந்தது.



இதனைத் தொடர்ந்து அருள்மிகு பொன்னர் சங்கர் திருக்கல்யாணம் நடைபெற்றது.



முன்னதாக ஐம்பொன்னால் ஆகிய பொன்னர், சங்கர், ஸ்ரீபச்சாயி, ஸ்ரீபவளாயி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து கணபதி பூஜை, செல்லாண்டியம்மன் பூஜை மற்றும் சிறப்பு ஹோமத்துடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.



திருக்கல்யாணத்தை தொடர்ந்து பொன்னர் சங்கருக்கு கிரீடம், செங்கோல் சாத்தப்பட்டு பட்டாபிஷேக விழாவும் நடந்தது.



இந்நிகழ்ச்சியை உடுமலை முனைவர் க. சீதாராமன், உடுமலை சிவா ஆகியோர் கதைப்பாடல் வழி நடத்தினர் நிகழ்ச்சியில் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...