ஜி.கே.என்‌.எம்‌‌. மருத்துவமனை சார்பாக பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை ஜி.கே.என்‌.எம்‌‌. மருத்துவமனை மற்றும்‌ செவிவியர்‌ பயிற்சி கல்லூரி சார்பில்‌ பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: ஜி.கே.என்‌. எம்‌‌. மருத்துவமனை சார்பில் பக்கவாத நோய ஏற்படமால்‌ தடுப்பதற்கான முன்னைச்சரிக்கை வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

உலகம்‌ முழுவதும்‌ இன்று பக்கவாத தினம்‌ கடைபிடிக்கப்படும்‌ நிலையில்‌, ஜி.கே.என்‌.எம்‌. மருத்துவமனை மற்றும்‌ செவிலியர்‌ பயிற்சி கல்லூரி சார்பில்‌ பக்கவாத நோய்‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை, ரேஸ்‌ கோர்ஸ்‌ பகுதியில்‌ நடத்தப்பட்டது. இந்த நிகழச்சியில்‌ ஜி.கே.என்‌.எம்‌. செவிலியர்‌ பயிற்சி கல்லூரி மாணவ மாணவிகள்‌ நாடக வடிவில்‌ நடித்து காண்பித்தும்‌ மற்றும்‌ இந்நோய்‌ குறித்த தகவல்கள்‌ அடங்கிய பதாகைகளை கைகளில்‌ ஏந்தியும்‌ பொதுமக்களிடையே பக்கவாதம்‌ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்‌.

பக்கவாத நோயினை முன்கூட்டியே எவ்வாறு கண்டறிவது, உரிய நேரத்தில் துரிதமாக மருத்துவ சிகிச்சை பெறுதல்‌, ஆரோக்கீயமான உணவு பழக்க வழக்கம்‌ மற்றும்‌ வாழ்க்கை முறையினை கடைபிடித்தல்‌, பக்கவாத நோய் ஏற்படமால்‌ தடுப்பதற்கான முன்னைச்சரிக்கை வழிமுறைகள்‌ உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு இந்நிகழச்சியில்‌ தெளிவான விளக்கம்‌ அளிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள்‌ இந்த பக்கவாத நோய்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சியின்‌ வாயிலாக பயன்‌ பெற்றனர்‌.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...