தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு

மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழல் தடுப்புத் துறைகள் பற்றியும், அவைகளின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை சமுதாயத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது பற்றி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர்.


திருப்பூர்: தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கான ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கணிதத்துறைத் தலைவர் ப.சுப்பிரமணியன் வரவேற்றார்.

கல்லூரி மாணவர்களுக்கு ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேராசிரியர்கள் கருத்துரை வழங்கினர். ஊழலை ஒழிப்பதில் மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ரா.சிவசாமி சிறப்புரையாற்றினார். கல்லூரி பேராசிரியர் ரா.சிவசாமி கூறியதாவது, சிறப்புரையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழல் தடுப்புத் துறைகள் பற்றியும், அவைகளின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்கள் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை சமுதாயத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை கௌரவ விரிவுரையாளர் கோ.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...