தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு

மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழல் தடுப்புத் துறைகள் பற்றியும், அவைகளின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை சமுதாயத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது பற்றி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர்.


திருப்பூர்: தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கான ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் க.பத்மாவதி தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கணிதத்துறைத் தலைவர் ப.சுப்பிரமணியன் வரவேற்றார்.

கல்லூரி மாணவர்களுக்கு ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேராசிரியர்கள் கருத்துரை வழங்கினர். ஊழலை ஒழிப்பதில் மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ரா.சிவசாமி சிறப்புரையாற்றினார். கல்லூரி பேராசிரியர் ரா.சிவசாமி கூறியதாவது, சிறப்புரையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழல் தடுப்புத் துறைகள் பற்றியும், அவைகளின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்கள் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை சமுதாயத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை கௌரவ விரிவுரையாளர் கோ.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...