வால்பாறையில் தேயிலை தோட்டம் தொழிலாளர் குடியிருப்பை சேதப்படுத்திய 9 காட்டு யானைகள்

இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள், இஞ்சிபாறை எஸ்டேட் பகுதியில் பகுதி மாடல் காலனி என்ற இடத்தில் உள்ள கலைச்செல்வி என்பவர் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த பீரோ, டிவி, கட்டில், உணவுப் பொருட்கள் போன்ற பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளில் இருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.



இந்நிலையில் வால்பாறை அருகே இஞ்சிபாறை எஸ்டேட் பகுதியில் பகுதியில் மாடல் காலனி என்ற இடம் உள்ளது. இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 9 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது அங்கு கலைச்செல்வி என்பவர் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த பீரோ, டிவி, கட்டில், உணவுப் பொருட்கள் போன்ற பொருள்களை உடைத்து சேதப்படுத்தியது.



வீட்டில் இருந்த கலைச்செல்வி மற்றும் அவரது அம்மா இரண்டு குழந்தைகள் ஆகிய நான்கு பேரும் யானை வீட்டை உடைப்பதை அறிந்து உயிருக்கு பயந்து வீட்டின் பின் பகுதியில் அமைந்துள்ள கழிவறையில் உயிர் தப்பிக்க ஒளிந்து இருந்தனர்.

யானைகள் வீட்டின் முன்புறமும் பின்புறமும் நின்றதால் அருகில் உள்ள வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில் சிறிது நேரம் அங்கேயே நின்று அருகில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்த பின்பு வனத்துறையினரும் அருகில் உள்ளவர்களும் யானைகளை சத்தம் போட்டு வனப் பகுதிக்குள் விரட்டினார்.

சுமார் ஒரு மணி அளவில் வந்த காட்டு யானைகள் வீட்டை உடைத்து வீட்டின் முன்பு நின்று செடி கொடிகளை சாப்பிட்டு சுமார் மூன்று முப்பது மணி அளவில் யானைகளை விரட்டி வனப்பகுதிக்கு சென்றது.



வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் யானைகள் வீட்டின் வெளியே எடுத்து வீசியது இதில் அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தது தகவல் அறிந்து வந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் 15 வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் வனத்துறையினரிடம் எஸ்டேட் மேலாளர்களிடமும் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து யானைகள் சேதப்படுத்திய வீட்டு உரிமையாளர்களுக்கு பண உதவி வழங்கிய சென்றனர். யானைகள் வீட்டின் அருகே வராமல் தடுக்க வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...