நீண்ட்நாட்கள் குப்பை மற்றும் கழிவு பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுவதால் மாசு ஏற்பட்டு பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
கோவை: குப்பைகளை அகற்றக் கோரியும் தீ வைப்பதை தடுக்க கோரியும் நீலிகோணாம்பாளையம் பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்
கோவை நீலிகோணம்பாளையம் தச்சன் தோட்டம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.

இந்நிலையில் தச்சன் தோட்டம் வடக்கு விநாயகர் நகர் பகுதியில் ரயில்வே வழித்தடம் ஓரத்தில் அதிகமாக கழிவுகள் குப்பைகள் தனியார் கம்பெனிகளாலும் பழைய பொருள் வியாபாரம் செய்பவர்களாலும் கொட்டப்படுவதாகவும் பலமுறை அந்தக் கழிவு பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுவதால் மாசு ஏற்பட்டு பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாகவும் இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் இந்தப் பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அப்பகுதி மக்கள், குப்பைகள் கொட்டப்படுவதையும் தீ வைத்து மாசு ஏற்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இந்த கோரிக்கை மனுவை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை நீலிகோணம்பாளையம் தச்சன் தோட்டம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
இந்நிலையில் தச்சன் தோட்டம் வடக்கு விநாயகர் நகர் பகுதியில் ரயில்வே வழித்தடம் ஓரத்தில் அதிகமாக கழிவுகள் குப்பைகள் தனியார் கம்பெனிகளாலும் பழைய பொருள் வியாபாரம் செய்பவர்களாலும் கொட்டப்படுவதாகவும் பலமுறை அந்தக் கழிவு பொருட்கள் தீ வைத்து எரிக்கப்படுவதால் மாசு ஏற்பட்டு பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாகவும் இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் இந்தப் பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அப்பகுதி மக்கள், குப்பைகள் கொட்டப்படுவதையும் தீ வைத்து மாசு ஏற்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இந்த கோரிக்கை மனுவை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.