குறிச்சி அரவான் திருவிழா நடத்துவதற்கு தடை - உரிய நடவடிக்கை கோரி ஒருங்கிணைப்புக்குழு மனு

கோவை குறிச்சி பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் அரவான் திருவிழாவிற்கு தடையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஒருங்கிணைப்புக்குழு மனு அளித்துள்ளது.


கோவை: குறிச்சி அரவான்திருவிழா நடத்திட நிர்வாக ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை குறிச்சி பகுதியில் ஆண்டுதோறும்அரவான் திருவிழா நடைபெற்று வருகிறது. பல வருடங்களாக 16 சமுதாய மக்கள் ஒன்றிணைந்து இந்த அரவான் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் இந்தத் திருவிழாவை நடத்த வேண்டிய நிர்வாகிகளில் ஒரு சிலர் தடையாக இருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்திட வேண்டியும் குறிச்சி அரவான் ஒருங்கிணைப்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்த அவர்கள் அளித்துள்ள மனுவில், இந்த திருவிழா நடத்துவதற்கு கூட்டத்தை அறிவிக்க வேண்டிய ஊர் கவுண்டர் பத்மகுமார் அவர் சொல்லும் படியாக மற்ற சமூகத்தினர்கேட்டால் மட்டுமே தேதியை அறிவிப்பேன் எனக் கூறுவதாகவும் கணக்குப் பிழையான மரகதம் பிள்ளை தனது வீட்டிற்கு வந்தால் மட்டுமே நான் கலந்து கொள்வேன் என்கிறார் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் தேவர் சமூகத்தில் மூன்று பேர் நாங்கள் தான் தேவர் சமூகப் பிரதிநிதி(முக்கந்தர்) என்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர்கள் இந்த நபர்களால் அவர்கள் சார்ந்த சமூகத்தினர் திருவிழா நடக்க வேண்டும் என்று நினைத்தாலும் இவர்கள் தடையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.



எனவே திருவிழாவிற்கு தடையாக உள்ள இவர்களை முறையாக விசாரித்து திருவிழா நடத்திட நிர்வாக ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...