தாராபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு

மழை நீர் வடிகால் அமைத்தல், நகராட்சி பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றை பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகளை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் ஆய்வு செய்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதியில் 19 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை பணிகளான சாக்கடைகள் பராமரிப்பு, குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் ஆய்வு செய்தார்.



இதனை தொடர்ந்து சீதா நகர் சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் போலீஸ் நிலைய வீதி ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் புதிதாக அமைத்தல் நகராட்சி பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றை பழுது நீக்குதல் செய்யப்பட பணிகளையும் ஆய்வு செய்தார்.



இதனை தொடர்ந்து 26, 27 ஆகிய பகுதிகளில் சமுதாய கழிப்பிடமும் பராமரிப்பு பணிகள் மற்றும் மழைநீர் வடிகால், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.



இதில் திமுக நகரச் செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...