மழை நீர் வடிகால் அமைத்தல், நகராட்சி பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றை பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகளை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் ஆய்வு செய்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதியில் 19 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை பணிகளான சாக்கடைகள் பராமரிப்பு, குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை நகராட்சி தலைவர் பாபு கண்ணன் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து சீதா நகர் சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் போலீஸ் நிலைய வீதி ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் புதிதாக அமைத்தல் நகராட்சி பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றை பழுது நீக்குதல் செய்யப்பட பணிகளையும் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து 26, 27 ஆகிய பகுதிகளில் சமுதாய கழிப்பிடமும் பராமரிப்பு பணிகள் மற்றும் மழைநீர் வடிகால், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் திமுக நகரச் செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சீதா நகர் சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் போலீஸ் நிலைய வீதி ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் புதிதாக அமைத்தல் நகராட்சி பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள் ஆகியவற்றை பழுது நீக்குதல் செய்யப்பட பணிகளையும் ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து 26, 27 ஆகிய பகுதிகளில் சமுதாய கழிப்பிடமும் பராமரிப்பு பணிகள் மற்றும் மழைநீர் வடிகால், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் திமுக நகரச் செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு, நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.