தாராபுரத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்டிஓ விடம் மனு

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், தாராபுரம் பகுதியில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தக்கோரியும் ஆர்டிஓ விடம் விசிகவினர் மனு அளித்தனர்.


திருப்பூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து தலைமையில், நகர செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஆர்டிஓ செந்தில் அரசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



இதில் கூறியிருப்பதாவது தாராபுரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், தாராபுரம் பகுதியில் போதை பொருள்கள் மிகவும் எளிதாக கிடைக்கின்றது. இதனால் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் எனவே இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதை பொருள்கள் விற்பனையை தடுக்கவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் கண்காணிப்பு கேமரா அனைத்து பகுதிகளிலும் அமைக்க வேண்டும், போலீசார் ரோந்து பணியினை அதிகப்படுத்த வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது மாநில செயலாளர் விவசாயிகள் பாதுகாப்பு சங்க முத்தமிழ் வேந்தன், மாவட்ட துணை செயலாளர் ஆற்றல் அரசு, நகர துணை செயலாளர்கள் உதயகுமார், முருகவேல் உள்ளிட்ட விசிகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...