கள்ளக்கிணறு கொலை சம்பவத்தை தொடர்ந்து புதிய சோதனை சாவடி அமைப்பு

தொழில் வளர்ச்சி மிகுந்த பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருகின்றனர். குற்றப் பின்னணியில் உள்ளவர்களா என்பதை விசாரித்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், வீடு வாடகைக்கு எடுப்பவர்கள் குறித்த முழு தகவல்களையும் பெற்ற பின்பு அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பல்லடம் தாராபுரம் சாலையில் புதிய சோதனை சாவடி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.



இந்நிலையில் அங்கு புதிய சோதனை சாவடி கட்டப்பட்டு வந்த நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் அவர்கள் ரிப்பன் வெட்டி புதிய சோதனை சாவடியை திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் ADSP ஜான்சன், பொறுப்பு டிஎஸ்பி முத்துரத்தினம், காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ரவி, பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லட்சுமி, பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோகன், மற்றும் ஊர் மக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.



தொழில் வளர்ச்சி மிகுந்த பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருகின்றனர். குற்றப் பின்னணியில் உள்ளவர்களா என்பதை விசாரித்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், வீடு வாடகைக்கு எடுப்பவர்கள் குறித்த முழு தகவல்களையும் பெற்ற பின்பு அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...