கள்ளக்கிணறு கொலை சம்பவத்தை தொடர்ந்து புதிய சோதனை சாவடி அமைப்பு

தொழில் வளர்ச்சி மிகுந்த பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருகின்றனர். குற்றப் பின்னணியில் உள்ளவர்களா என்பதை விசாரித்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், வீடு வாடகைக்கு எடுப்பவர்கள் குறித்த முழு தகவல்களையும் பெற்ற பின்பு அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பல்லடம் தாராபுரம் சாலையில் புதிய சோதனை சாவடி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.



இந்நிலையில் அங்கு புதிய சோதனை சாவடி கட்டப்பட்டு வந்த நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் அவர்கள் ரிப்பன் வெட்டி புதிய சோதனை சாவடியை திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் ADSP ஜான்சன், பொறுப்பு டிஎஸ்பி முத்துரத்தினம், காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் ரவி, பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லட்சுமி, பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோகன், மற்றும் ஊர் மக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.



தொழில் வளர்ச்சி மிகுந்த பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருகின்றனர். குற்றப் பின்னணியில் உள்ளவர்களா என்பதை விசாரித்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், வீடு வாடகைக்கு எடுப்பவர்கள் குறித்த முழு தகவல்களையும் பெற்ற பின்பு அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...