உடுமலை அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கி வரும் அவலம் - பாதை அமைத்து தரக்கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனச்சரகங்களில் மலைவாழ் குடியிருப்பு மக்களுக்கு விரைந்து பாதை அமைத்து கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாரு, ஆட்டுமலை ஈசல்தட்டு, குலிப்பட்டி, குருமலை, மேல்குருமலை, மாவட்டப்பு, தளிஞ்சி, தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு தேவையான ஒரு சில அடிப்படை வசதிகள் வனத்துறை, வருவாய் துறை,தன்னார்வலர்கள் சார்பில் அவ்வப்போது செய்து தரப்படுகிறது. ஆனால் இன்றளவும் பாதை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முழுமையாக பூர்த்தி அடைவதற்கு வழிவகை பிறக்கவில்லை. இதனால் பிரசவம்,அவசரகால உதவி, விபத்து, ஏதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகள் நடைபெற்றால் சிகிச்சைக்கு அடிவாரப் பகுதிக்கு வருவதற்குள் மலைவாழ் மக்கள் மறு ஜென்மம் எடுத்து விடுகின்றனர்.



பாதை வசதி இல்லாததால் உயிரைக் காக்க உயிரை பணயம் வைத்து நோயால் பாதிக்கப்பட்ட நபரை அடர்ந்த வனப்பகுதிக்குள் தொட்டில் கட்டி தூக்கி வந்து அடிவாரத்தை அடைய வேண்டிய சூழல் உள்ளது.

பின்னர் வாகனத்தை பிடித்து ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வேண்டிய உள்ளது. இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், மலைவாழ் குடியிருப்புகளுக்கு பாதை வசதி அமைப்பதற்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து தொடங்குவதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும். அடிப்படை தேவையான பாதை வசதி பூர்த்தி அடைந்தால் யாருடைய உதவியும் இல்லாமல் எந்த ஒரு தேவையும் காலத்தே செய்து கொள்ள இயலும். எனவே மலைவாழ் குடியிருப்புகளுக்கு விரைந்து பாதை அமைத்து கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...