உடுமலையில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் - கால்நடை உதவி இயக்குனர் ஆய்வு

உடுமலை கோட்டத்தில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாக்குமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் முகாமினை கால்நடை உதவி இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

உடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்தின் உபதொழிலான கால்நடை வளர்ப்பு பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பசு மற்றும் எருமை உள்ளிட்ட கால்நடைகளை கோமாரி நோயில் இருந்து பாதுகாக்கும் வகையில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட கழுகரைப் பகுதியில் நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பூசி முகாமை உடுமலை கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் கூறுகையில், கோமாரி நோய் தடுப்பு ஊசி 4- ம் சுற்று வருகின்ற 26 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.

உடுமலை கோட்டத்தில் மொத்தம் உள்ள 63 ஆயிரம் பசு மற்றும் எருமை இனங்கள், மாநில எல்லையோர கிராமங்களில் உள்ள 12 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஏற்கனவே செலுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ப செயல் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தடுப்பூசி குழுவினர் தங்கள் பகுதிக்கு வரும் பொழுது தங்களது 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...