திருச்செந்தூர் ரெயிலில் செல்ல வசதியாக கோவையில் இருந்து மீண்டும் பொள்ளாச்சிக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும் என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை: திருச்செந்தூர் ரெயிலில் செல்ல வசதியாக கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு இணைப்பு ரெயில் மீண்டும் இயக்கப்படுமா என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இணைப்பு ரெயில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, மதுரை, நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சிக்கு காலை 7.10 மணிக்கு வந்து, பின்னர் திருச்செந்தூருக்கு மாலை 3.15 மணிக்கு சென்று அடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து பகல் 12.20 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு இரவு 8 மணிக்கு வந்து சேருகிறது.
கொரோனாவிற்கு முன் இந்த ரெயிலில் செல்ல கோவையில் இருந்து இணைப்பு ரெயில் இயக்கப்பட்டது. தற்போது அந்த ரெயில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவை, கிணத்துக்கடவு, போத்தனூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பஸ் ஏறி கோவை, கிணத்துக்கடவு, போத்தனூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பஸ் ஏறி பொள்ளாச்சிக்கு வந்து திருச்செந்தூர்ரெயிலில் செல்கின்றனர். இதனால் திருச்செந்தூர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு மீண்டும் இணைப்பு ரெயில்இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது, மீண்டும் இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்.
கொரோனாவிற்கு முன் கோவையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு 6.45 மணிக்கு வரும் வகையில் இணைப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதேபோன்று அந்தரெயில் பொள்ளாச்சியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு கோவையை சென்று அடைந்தது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.
மேலும் கிணத்துக்கடவு, போத்தனூர் ரெயில் நிலையங்களில் நின்று சென்ற தால் தென்மாவட்ட மக்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி கொண்டனர். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட ரெயிலை மீண்டும் இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் திருச்செந்தூர் ரெயிலில் செல்ல கோவை, கிணத்துக்கடவு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பஸ் பிடித்து பொள்ளாச்சிக்கு வர வேண்டியது உள்ளது. மேலும் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் ஒரு பஸ் பிடித்து ரெயில் நிலையம் செல்ல வேண்டியநிலை உள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே திருச்செந்தூர் ரெயிலில் செல்ல வசதியாக கோவையில் இருந்து மீண்டும் பொள்ளாச்சிக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி இணைப்பு ரெயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணைப்பு ரெயில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, மதுரை, நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சிக்கு காலை 7.10 மணிக்கு வந்து, பின்னர் திருச்செந்தூருக்கு மாலை 3.15 மணிக்கு சென்று அடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து பகல் 12.20 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு இரவு 8 மணிக்கு வந்து சேருகிறது.
கொரோனாவிற்கு முன் இந்த ரெயிலில் செல்ல கோவையில் இருந்து இணைப்பு ரெயில் இயக்கப்பட்டது. தற்போது அந்த ரெயில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோவை, கிணத்துக்கடவு, போத்தனூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பஸ் ஏறி கோவை, கிணத்துக்கடவு, போத்தனூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பஸ் ஏறி பொள்ளாச்சிக்கு வந்து திருச்செந்தூர்ரெயிலில் செல்கின்றனர். இதனால் திருச்செந்தூர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு மீண்டும் இணைப்பு ரெயில்இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது, மீண்டும் இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்.
கொரோனாவிற்கு முன் கோவையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு 6.45 மணிக்கு வரும் வகையில் இணைப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதேபோன்று அந்தரெயில் பொள்ளாச்சியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு கோவையை சென்று அடைந்தது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.
மேலும் கிணத்துக்கடவு, போத்தனூர் ரெயில் நிலையங்களில் நின்று சென்ற தால் தென்மாவட்ட மக்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி கொண்டனர். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட ரெயிலை மீண்டும் இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் திருச்செந்தூர் ரெயிலில் செல்ல கோவை, கிணத்துக்கடவு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பஸ் பிடித்து பொள்ளாச்சிக்கு வர வேண்டியது உள்ளது. மேலும் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் ஒரு பஸ் பிடித்து ரெயில் நிலையம் செல்ல வேண்டியநிலை உள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே திருச்செந்தூர் ரெயிலில் செல்ல வசதியாக கோவையில் இருந்து மீண்டும் பொள்ளாச்சிக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி இணைப்பு ரெயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.