கோவை அருகே ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை - ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டு

ஆம்புலன்ஸில் வரும் வழியில் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் சோதிக்கப்பட்ட நிலையில் தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயேகுழந்தை பிறந்த நிலையில் ஊழியருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கோவைநல்லாம்பாளையம் ரோடு, ரத்தினபுரியை சேர்ந்தவர் பழனிமுருகன்.இவரது மனைவி மம்தா( 29. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்வதற்காக, 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மம்தாவை அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு வந்தனர். மம்தாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததால், அவரை ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப ஊழியர் கோபாலகிருஷ்ணன் பரிசோதித்தார்.

குழந்தையின் தலை வெளியில் வந்தது தெரிந்தது.இதனால் வேறு வழியின்றி அவர், பிரசவம் பார்த்தார். இதில் மம்தாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மம்தாவை, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாய் மற்றும் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசரகாலத்தில் விரைந்து செயல்பட்டஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...