தாராபுரம் ஐயப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் தாராபுரம் சோழக்கடை வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது.


திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் தராரபுரம் ஐயப்பன் திருக்கோயில் மகா கும்பாபிசேகத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சோளக்கடை வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி ஆலய ஜீர்னோத்தாரன அஷ்பந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

தாராபுரம் சோழக்கடை வீதியில், ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கும் பணி, மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.



தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர். தொடர்ந்து, முதல்கால யாக பூஜை நடந்தது. 14-ம் தேதி காலை, இரண்டாம் காலயாக பூஜையும், அன்று மாலை, மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. 15-ல் நான்காம் கால யாக பூஜையும், மாலை, ஐந்தாம் கால யாக பூஜையும், கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.



காலை, ஆறாம் கால யாக பூஜையும், 8:30 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகமும், 9:30 மணிக்கு ஐயப்பன், மூலஸ்தானத்தில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் தாராபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோபுர தரிசனம் மற்றும் சுவாமி தரிசனம் செய்தனர்.

குறிப்பாக ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் தாராபுரம் சோழக்கடை வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது. என்பது தாராபுரம் ஐயப்பன் கோயிலின் சிறப்பு என பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு ஸ்ரீ ஐயப்பன் கோவில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் ஜெமினி பெருவழி பயணக்குழு, தலைவருமான சி.சண்முகவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...