கோவையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி - வரும் 25ம் தேதி தேர்தல் பார்வையாளர் வருகை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான தேர்தல் பார்வையாளர் சங்கர், வரும் 25ல் கோவையில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் ஆய்வு செய்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.


கோவை: கோவை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 27ல் வெளியிடப்பட்டது. 2024, ஜன.,1ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, 18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

அதன்படி, 4, 5 தேதிகளில் நடத்திய முகாமில், 34 ஆயிரத்து 921 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டாம் கட்ட முகாம், வரும் 18, 19ம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 13ம் தேதி (திங்கள்) அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதற்கு ஈடாக, 18ம் தேதி (சனி) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் பலரும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக இருப்பதால், அவர்கள் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

இது, தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, இரண்டாம் கட்ட சிறப்பு முகாம், 25 (சனி) மற்றும், 26ம் தேதிக்கு(ஞாயிறு) மாற்றப்பட்டிருக்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்காக, நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர் சங்கர், 25ல் கோவையில் முகாம் பணிகளை ஆய்வு செய்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...