கோவையில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி - வரும் 25ம் தேதி தேர்தல் பார்வையாளர் வருகை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான தேர்தல் பார்வையாளர் சங்கர், வரும் 25ல் கோவையில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் ஆய்வு செய்து அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.


கோவை: கோவை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 27ல் வெளியிடப்பட்டது. 2024, ஜன.,1ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, 18 வயது பூர்த்தியானவர்களை பட்டியலில் சேர்க்க, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்த, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

அதன்படி, 4, 5 தேதிகளில் நடத்திய முகாமில், 34 ஆயிரத்து 921 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரண்டாம் கட்ட முகாம், வரும் 18, 19ம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 13ம் தேதி (திங்கள்) அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதற்கு ஈடாக, 18ம் தேதி (சனி) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் பலரும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக இருப்பதால், அவர்கள் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

இது, தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, இரண்டாம் கட்ட சிறப்பு முகாம், 25 (சனி) மற்றும், 26ம் தேதிக்கு(ஞாயிறு) மாற்றப்பட்டிருக்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்காக, நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர் சங்கர், 25ல் கோவையில் முகாம் பணிகளை ஆய்வு செய்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...