செட்டிப்பாளையமத்தில் தேசிய சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - சீறி பாய்ந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள்

எல்.ஜி.பி பார்முலா 4, ஜே.கே டயர் நோவிஸ் கோப்பை, காண்டினென்டல் ஜி.டி கோப்பை, ஜே.கே டயர் 250 கோப்பை ஆகிய கோப்பைகளுக்கான பந்தயங்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் பிரபல நிறுவனமான ஜே.கே டயர் நிறுவனம் மற்றும் FMSCI எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 26-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.

அதன் அடிப்படையில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு அதன் இறுதி போட்டிகள் கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில்நடைபெற்றது.



ஜே.கே டயர் நோவிஸ் கோப்பைக்கான கார் பந்தயம், எல்ஜிபி ஃபார்முலா-4 கார் பந்தயம் பிரிவுகளாக இந்த போட்டிகள் நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான இறுதி போட்டி நேற்று தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.



இதில் எல்.ஜி.பி பார்முலா 4, ஜே.கே டயர் நோவிஸ் கோப்பை, காண்டினென்டல் ஜி.டி கோப்பை, ஜே.கே டயர் 250 கோப்பை ஆகிய கோப்பைகளுக்கான பந்தயங்கள் நடைபெற்றது.



இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...