காலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் மகாசங்கல்பம், வேதிகார்ச்சனை, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு 54 வகையான மூலிகை பொடிகளால் அபிஷேகம் நடைபெற்றது.
கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள தெற்குபாளையம் காந்திநகர்-2 உள்ள அருள்மிகு வில்வமாரியம்மன் திருக்கோயிலில் 2024ஆம் ஆண்டு புது வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் மகாசங்கல்பம், வேதிகார்ச்சனை, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு 54 வகையான மூலிகை பொடிகளால் அபிஷேகம் நடைபெற்றது.

அதன்பிறகு ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு குதிரை வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாரதனை நடைபெற்றது.

முன்னதாக பக்தி திரைப்பட இன்னிசை நாதஸ்வரம் கச்சேரி வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சந்தோஷ்குமார் சிவம் தலைமையில் கோவில் கமிட்டி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
அதன்பிறகு ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு குதிரை வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாரதனை நடைபெற்றது.
முன்னதாக பக்தி திரைப்பட இன்னிசை நாதஸ்வரம் கச்சேரி வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சந்தோஷ்குமார் சிவம் தலைமையில் கோவில் கமிட்டி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.