தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடு இரவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இரவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடு இரவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து உப்பாறு விவசாயிகள் சங்க உறுப்பினர் சிவகுமார் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள உப்பாறு அணைக்கு பி.ஏ.பி தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி உப்பாறு பாசன விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் மற்றும் 10-கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஸ்துராஜ் விவசாயிகளின் கோரிக்கையான ஏற்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 1994 உத்தரவின்படி உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும். உப்பாறு அன்னைக்கு தண்ணீர் வரும் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பாசனத்துக்கான மின் துண்டிப்பு அமல்படுத்த வேண்டும். வேளாண்மை இல்லாத மாற்று பயன்பாட்டிற்கு உள்ள நிலங்களை கண்டறிந்து அதற்கு தகுந்தபடி நீர் வினியோகம் செய்ய வலியுறுத்த வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு ஆண்டு காலம் ஆகியும் செயல்படுத்தாத திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், மேலும் திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு 24 அடி முழு கொள்ளளவு நீர் ஆன அரை டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் வந்து உத்தரவாதம் அளிக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் தொடர்ந்து பகுதியில் போராட்டம் நடைபெறும் என இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள் தெரிவிக்கையில் ஆடு மாடு கோழிகளுக்கு தண்ணீர் இன்றியும், மேலும் மனிதர்களுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாமலும் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எங்களுக்கு உயிர் வாழ்வதற்கு உயிர் தண்ணீராவது அதிகாரிகள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் போராட்டத்தின் போது விவசாயிகள் தரையில் அமர்ந்தும் படுத்து கொண்டும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அணைப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...