பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை குமரகுரு அணி வெற்றி

கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கோவை யுனைடெட் அணி இரண்டாம் பரிசும், சென்னை சத்தியபாமா அணி மூன்றாம் பரிசும், திண்டுக்கல் GTN அணி நான்காம் பரிசும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பணமும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.


கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கூடை பந்தாட்ட விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக நேஷனல் கூடை பந்தாட்ட கழகம் சார்பில், தாக்கூர் கோப்பை 26 ஆவது மாநில அளவிலான கூடை பந்து போட்டி பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 3ம் தேதி புதன் கிழமை தொடங்கியது.

இதில் சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்கு பெற்று விளையாடின.



நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நேற்று இரவு நடைபெற்றது.



விறுவிறுப்பாக நடைபெற்ற லீக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்ற கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கோவை யுனைடெட் அணி இரண்டாம் பரிசும், சென்னை சத்தியபாமா அணி மூன்றாம் பரிசும், திண்டுக்கல் GTN அணி நான்காம் பரிசும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பணமும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...