கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம் முதலான நிகழ்வுகளும் பொங்கல் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.


கோவை: கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் 12.01.2024, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.



காளை மாடுகள், குதிரைகள், ஆட்டுக்கிடாய்களின் வரிசையுடன் நடைபெற்ற விழாவினை துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி அவர்கள் தொடங்கிவைத்தார்.



விழாவையொட்டி மாணவர்களின் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.

தமிழர்களின் வீர விளையாட்டாகிய சிலம்பம் மற்றும் ஒற்றைக்கம்பு வீச்சுப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.



அத்துடன் பொங்கல் வைத்தல், கோலமிடுதல், நாட்டுப்புற நடனமாடல் போட்டிகளும், உரியடித்தல், கயிறிழுத்தல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் சிறப்புற நடைபெற்றன.



நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம் முதலான நிகழ்வுகளும் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...