கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் குறைப்பு

கோவை, சென்னை இடையே இயக்கப்படும் 3 விமானங்கள், கோவை, ஹைதராபாத் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மற்றும் கோவை, பெங்களூர் இடையே இயக்கப்படும் 1 விமானம் ஆகியவற்றின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து 27 உள்நாட்டு விமான சேவைகளும், 2 சர்வதேச விமான சேவைகளும் வழங்க முடியும் என்ற நிலையில் சமீப காலமாக விமான சேவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (DGCA) உத்தரவின்படி தனியார் விமான நிறுவனமான இண்டிகோவின் 30 விமான சேவைகள் நாடு முழுவதும் அண்மையில் நிறுத்தப்பட்டது. இதில் இண்டிகோ கோவைக்கு வழங்கிய 6 சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

கோவை, சென்னை இடையே இயக்கப்படும் 3 விமானங்கள், கோவை, ஹைதராபாத் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மற்றும் கோவை, பெங்களூர் இடையே இயக்கப்படும் 1 விமானம் ஆகியவற்றின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சேவை குறைப்பு துவங்கிய நிலையில் இதன் காரணமாக கோவையில் இருந்து இப்பகுதிகளுக்கு விமானம் வழியே செல்வது பயணிகளுக்கு சவாலாக இருக்கிறது. விமான சேவைகளுக்கான டிமாண்ட் அதிகரிக்க டிக்கெட் கட்டணமும் பெருமளவு உயர்ந்திருக்கிறது.

இதனால் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் இந்த உத்தரவை அறிவித்திருக்கிறது என்பது முழுமையாக இன்னும் வெளிவரவில்லை என்றாலும் தகவல்களின்படி இண்டிகோ வைத்துள்ள A320 என்ற வகை விமானங்களில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதேபோல இண்டிகோ நிறுவனம் தனது A320வகை விமானத்திற்கு மாற்றாக சில இடங்களில் ATR இனம் மற்றொரு வகை விமானத்தை அறிமுகப்படுத்தவும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இண்டிகோ விமான நிறுவனத்தில் A320 ரக விமானங்களே அதிகம் உள்ளது என்பதும், 2023ல் தனது விமானங்களில் எரிபொருளை 6 கிலோ வரை மிச்சப்படுத்துவதற்காக Flap - 3 landing எனும் அபாயகரமான தரையிறங்கும் முறையை பின்பற்ற தனது பைலட்டுகளுக்கு பரிந்துரைத்து, அதை பின்பற்ற வைத்ததற்காக அந்த நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...