திருப்பூரில் மக்கள் நல மன்றத்தின் சார்பில் திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனியம்மாள், தொழில் அதிபர் மகேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூரில் மக்கள் நல மன்றத்தின் சார்பில் 20வது ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் பினலாடைக்கு பிரசித்தி பெற்ற நகரமாகும். இங்கு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தைத்திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று பின்னலாடை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள மக்கள் நல மன்றத்தின் சார்பில் இருபதாம் ஆண்டு மூன்று நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது.



இரண்டாம் நாளான திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனியம்மாள், தொழில் அதிபர் மகேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி பொங்கல் விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் திருப்பூரில் வசிக்கும் இப்பகுதி மக்களுக்கு மக்கள் நல மன்றத்தின் சார்பில் நடைபெற்று வரும் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் அப்பகுதியில் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...