வடுகபாளையத்தில் மது போதையில் அதிவேகமாக காரை இயக்கிய நபரின் செல்போனை பறித்ததால் சாலையில் படுத்து அட்டகாசம்

மதுபோதையில் அதிவேகமாக காரை இயக்கிய காரணத்தால், செல்போனை பறித்துக் கொண்டு போலீசார் தராததால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் படுத்துக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையத்தில் அதிவேகமாக மது போதையில் காரை இயக்கி சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்றதாக கூறி பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அதிவேகமாக காரை இயக்கிய நபரின் செல்போனை பிடுங்கி வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் மது போதையில் காரில் வந்த நபர் அந்த இருசக்கர வாகன ஓட்டியிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.



இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



மேலும் செல்போனை பறித்துக் கொண்டு தராததால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் படுத்துக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளார். மேலும் அங்கு வந்த போதை ஆசாமியின் நண்பர்கள் அந்த இருசக்கர வாகன ஓட்டியை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடிக்கவும் முயன்றுள்ளனர்.



இதனையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே போதை ஆசாமி சாலையில் படுத்து அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...