மாணவ மாணவிகளின் பொதுத்தேர்வு வெற்றிக்காக பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்று, பல்வேறு மாவட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
கோவை: ஜனவரி 29 அன்று, பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

இந்த ஹோமம், தமிழ்நாடு மாநில பொதுத் தேர்வில் பங்கேற்கும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வெற்றி பெற ஆசிகளை பெறுவதற்கு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வு, மாணவர்கள் உயர் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும், தேர்வு எழுதும் போது அச்சமின்றி இருக்க வேண்டும் மற்றும் கல்வி ஞானத்தில் சிறப்பு பெற வேண்டும் என்பதை முன்னிறுத்தி நடைபெற்றது.

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த ஹோமத்தில் பங்கேற்றனர்.

ஹோமத்தில் வேத மந்திரங்கள் முழங்க லஷ்மி ஹயக்ரீவருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. மாணவர்கள் லஷ்மி ஹயக்ரீவர் மகா மந்திரத்தை 21 முறை உச்சரித்து, தேர்வுகளில் சிறந்து விளங்க பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் பல பெற்றோர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர். மாணவ மாணவிகளுக்கு பென்சில், பேனா ஆகியவை வழங்கப்பட்டது.
மாணவர்கள் கணிகா மற்றும் ரகுகுமார் இந்த சிறப்பு ஹோமத்தில் பங்கேற்று தங்கள் அனுபவங்களையும், தேர்வுக்கான எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்தனர்.
இந்த ஹோமம், தமிழ்நாடு மாநில பொதுத் தேர்வில் பங்கேற்கும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வெற்றி பெற ஆசிகளை பெறுவதற்கு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வு, மாணவர்கள் உயர் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும், தேர்வு எழுதும் போது அச்சமின்றி இருக்க வேண்டும் மற்றும் கல்வி ஞானத்தில் சிறப்பு பெற வேண்டும் என்பதை முன்னிறுத்தி நடைபெற்றது.
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த ஹோமத்தில் பங்கேற்றனர்.
ஹோமத்தில் வேத மந்திரங்கள் முழங்க லஷ்மி ஹயக்ரீவருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. மாணவர்கள் லஷ்மி ஹயக்ரீவர் மகா மந்திரத்தை 21 முறை உச்சரித்து, தேர்வுகளில் சிறந்து விளங்க பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் பல பெற்றோர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர். மாணவ மாணவிகளுக்கு பென்சில், பேனா ஆகியவை வழங்கப்பட்டது.
மாணவர்கள் கணிகா மற்றும் ரகுகுமார் இந்த சிறப்பு ஹோமத்தில் பங்கேற்று தங்கள் அனுபவங்களையும், தேர்வுக்கான எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்தனர்.