பொள்ளாச்சியில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மாணவர்களுக்காக ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம் நடைபெற்றது

மாணவ மாணவிகளின் பொதுத்தேர்வு வெற்றிக்காக பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்று, பல்வேறு மாவட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: ஜனவரி 29 அன்று, பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.



இந்த ஹோமம், தமிழ்நாடு மாநில பொதுத் தேர்வில் பங்கேற்கும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வெற்றி பெற ஆசிகளை பெறுவதற்கு நடத்தப்பட்டது.



இந்த நிகழ்வு, மாணவர்கள் உயர் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும், தேர்வு எழுதும் போது அச்சமின்றி இருக்க வேண்டும் மற்றும் கல்வி ஞானத்தில் சிறப்பு பெற வேண்டும் என்பதை முன்னிறுத்தி நடைபெற்றது.



கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த ஹோமத்தில் பங்கேற்றனர்.



ஹோமத்தில் வேத மந்திரங்கள் முழங்க லஷ்மி ஹயக்ரீவருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. மாணவர்கள் லஷ்மி ஹயக்ரீவர் மகா மந்திரத்தை 21 முறை உச்சரித்து, தேர்வுகளில் சிறந்து விளங்க பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



இந்த நிகழ்வில் பல பெற்றோர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர். மாணவ மாணவிகளுக்கு பென்சில், பேனா ஆகியவை வழங்கப்பட்டது.

மாணவர்கள் கணிகா மற்றும் ரகுகுமார் இந்த சிறப்பு ஹோமத்தில் பங்கேற்று தங்கள் அனுபவங்களையும், தேர்வுக்கான எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...