சரவணம்பட்டியில் தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற தொழில்நுட்ப திறன் வளர்ப்பு போட்டியில் பள்ளி மாணவர்கள் அச்சத்தல்

பைதான் திட்டப் போட்டியில், முதல் பரிசினை கே.ஜி.எஸ் மற்றும் அவிலா கான்வென்ட் பள்ளியும், இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள கே.ஜி.மகளிர் பள்ளியும், நான்காவது இடத்தை ஆதித்யா வித்யாசரம் பள்ளியும், ஐந்தாம் இடத்தை ஏ.ஆர்.எம் பள்ளியும் பெற்று அசத்தின.


கோவை: லெட்ஸ் கோட் தமிழ்நாடு 2024 மூலம் தொழில்நுட்ப திறன் வளர்ப்பது தொடர்பான மூன்று மாத பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கபட்டது. இப்பயிற்சியின் இறுதியில் கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனங்களால் பைதான் திட்டப் போட்டிகள் நடத்தபட்டது.

இதில் 30 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு மாணவர்களை நடைமுறை பைதான் திறன்களுடன் சிந்தனையை தூண்டுவதும், புதுமையான திட்டங்களைக் காண்பிப்பதற்கான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனங்களின் வழிகாட்டிதலில் பைதான் பயிற்சியை பெற்ற மாணவர்கள் சிஸ்கோ பைதான் சான்றிதழைப் பெற்றனர். இந்த பைதான் திறன் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை கே.ஜி.மருத்துவமணையின் தலைவர் பக்தவச்சலம், கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி குழுமங்களின் தலைவர் அசோக் பக்தவச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர் பரிசுகளை வழங்கினர்.



இதில் முதல் பரிசினை கே.ஜி.எஸ் மற்றும் அவிலா கான்வென்ட் பள்ளியும், இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள கே.ஜி.மகளிர் பள்ளியும், நான்காவது இடத்தை ஆதித்யா வித்யாசரம் பள்ளியும், ஐந்தாம் இடத்தை ஏ.ஆர்.எம் பள்ளியும் பெற்று அசத்தின. மேலும் இந்த பைதான் போட்டிக்கு மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்த பேராசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கபட்டனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...