ஆழியார் வால்பாறை சாலையில் காரை இரண்டு நிமிடம் 40 நொடிகளில் 220 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று ஏழு வயது சிறுவன் சாதனை

நன்கு பயிற்சி பெற்று, மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழ் பெற்ற சிறுவன் தேவசுகன், இன்று உலக சாதனை படைக்கும் விதமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வால்பாறை சாலையில் 900கிலோ எடையுள்ள காரை இழுக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.


கோவை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி மாரீஸ்வரி. இவர்களது மகனான தேவசுகன்(வயது7). 5ம் வகுப்பு படித்து வரும் தேவசுகனுக்கு சிறு வயதில் இருந்தே சாதனை படைக்கும் வகையில் சிறுவனின் பெற்றோர்கள் காரை இழுக்கும் வகையில் பயிற்சி அளித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நன்கு பயிற்சி பெற்று, மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழ் பெற்ற சிறுவன் தேவசுகன், இன்று உலக சாதனை படைக்கும் விதமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வால்பாறை சாலையில் 900கிலோ எடையுள்ள காரை இழுக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.



காரின் முன்புறம் கயிறு கட்டபட்டு 2 நிமிடம் 40 வினாடிகளில் 220மீட்டர் தூரம் இழுத்து சென்று சிறுவன் தேவசுதன் உலக சாதனை படைத்தார். சிறுவனின் இந்த உலக சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கமும் சோழன் உலக சாதனை நிறுவன அதிகாரிகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். சிறுவன் காரை இழுத்து சென்ற போது அங்கிருந்த பார்வையார்கள் கைதட்டி உற்சாகபடுத்தியதோடு பாராட்டும் தெரிவித்தனர்.



ஏற்கனவே இந்த சிறுவன் மதுரையில் 200மீட்டர் தூரம் காணை இழுத்து சென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...