தண்ணீர் திறந்து விடக்கோரி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 21 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் 18 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 44,480 ஏக்கர் பயன்பெறும் வகையில் இரண்டாம் சுற்று தண்ணீர் திறந்து விட கோரி ஆழியார் திட்ட குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரியிடம் கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 21 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் 18 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தனர்.



இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு முற்றுகைவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சார் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...