மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நகர திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

பொள்ளாச்சி நகர திமுக சார்பில் கோவை சாலையில் உள்ள காந்தி சிலை சிக்னல் அருகே நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதத்தை சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நகர திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாளை திமுகவினர் மத நல்லிணக்க நாளாக கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.



இதனையடுத்து, பொள்ளாச்சி நகர திமுக சார்பில் கோவை சாலையில் உள்ள காந்தி சிலை சிக்னல் அருகே நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதத்தை சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பின்னர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...