பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, மண்டல அளவிலான மாபெரும் பேச்சுப் போட்டி, கலைத்திறன் போட்டி, கலைஞர் கொண்டாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


கோவை: திமுக பொறியாளர் அணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, மண்டல அளவிலான மாபெரும் பேச்சுப் போட்டி, கலைத்திறன் போட்டி, கலைஞர் கொண்டாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணா முன்னிலை வகித்தார். இதில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.



இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் விதத்தில் நடனம் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றன. பேச்சுப் போட்டியில் பேசிய சரண்யா என்ற மாணவி, கலைஞர் என்பவர் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று சொன்னால் அது மிகையாகாது. சிந்தனையாலும், நிர்வாகத் திறமைகளும், எளிய மனிதருக்கும் தன் கொண்ட மானுட பற்றால் கொண்ட கொள்கையால் திட்டங்கள் தீட்டி தமிழகத்தின் முகத்தை மாற்றி அமைத்தவர் ஒரே தலைவர் கலைஞர் என்றார் .

இதனை தொடர்ந்து பேசிய ரமேஷ் என்ற மாணவன், எட்டாம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் கொண்டு வந்து பெண்கள் அனைவரையும் படிக்க வைத்து பெண் சமுதாயத்தை மேலோக்கியவர் கலைஞர் என்றார். இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...