கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணையவழி பட்டப் படிப்பில் சேர்க்கை தொடக்கம்

இணையவழியில் பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், தொழில் வழிகாட்டுதல், எம்.காம். வணிகவியல், நிதி-கணக்கியல், எம்.சி.ஏ. போன்ற 11 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் இணையவழியில் நடத்தும் பட்டப் படிப்புகளில் சேர மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது, பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் தொலைநிலைக் கல்வித் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் இணையவழியில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்த பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அனுமதி பெறப்பட்டு, சிறப்பாக நடத்தப்படுகிறது. அதன்படி, பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், தொழில் வழிகாட்டுதல், எம்.காம். வணிகவியல், நிதி-கணக்கியல், எம்.சி.ஏ. போன்ற 11 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் பிப்ரவரி 2024 அமா்வுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. இணையவழியில் நடத்தப்படும் அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் விண்ணப்பம் பதிவு செய்தல், கல்விக் கட்டணம், பாடம் நடத்துவது, தோ்வு, சான்றிதழ் வழங்குவது என அனைத்தும் இணையவழியிலேயே நடைபெறும். இந்த நிலையில் இணையவழி படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...