தென் குமாரபாளையம் கிராமத்திற்கு சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள தென்குமாரபாளையம் கிராமத்தில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுவதாக கூறப்படுகிறது.



மேலும் இந்த கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ள அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்து இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை கிராம முற்றுகையிட்டு சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்து முறையிட்டனர்.

அம்பராம்பாளையம் ஆற்றில் தண்ணீர் இருந்தும் தற்போது மின்தடையும் ஏதும் இல்லாத போதிலும் தங்கள் கிராமத்திற்கு நாள்தோறும் ஒதுக்கப்பட்ட தண்ணீர் முறையாக வருவதில்லை எனவும், தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலானதால் அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தண்ணீர் இல்லாத காரணத்தால் கிராமத்திலிருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முறையாக குடிநீர் வழங்காமல் மெத்தனப் போக்காக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இன்னும் இரண்டு நாட்களில் தண்ணீர் வரவில்லை என்றால் கிராம மக்கள் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என முற்றுகையிட்ட கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...