சரவணம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ள விழா நடைபெறும் இடத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

ரூ.780 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளை (பில்லூர் - III) துவக்கி வைக்க, வரும் 11.02.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.


கோவை: கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில், பவானி ஆற்றினை நீராதாரமாக கொண்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ.780 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளை (பில்லூர் - III) துவக்கி வைக்க, வரும் 11.02.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.



இந்த நிலையில் இத்திட்டத் துவக்க விழா நடைபெறும் கோவை, சரவணம்பட்டி, குமரகுரு பொறியியல் கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் விழா பந்தல் அமைக்கும் பணிகளை, வீட்டு வசதித்துறை அமைச்சர், சு.முத்துசாமி தலைமையில் இன்று (பிப்.7) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கழகச் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள், வடக்கு மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...